1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 15 மே 2015 (12:56 IST)

6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 13 வயது சிறுவர்கள்

பெங்களூரு அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை, 13 வயது சிறுவர்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பெங்களூரு புறநகர் பகுதி பன்னரகட்டாவில், தெருவில் தனது சகோதரருடன் விளையாடிக் கொண்டிருந்தார் 6 வயது சிறுமி ஒருவர்.
 
அப்போது, 13 வயது உடைய பள்ளி மாணவர்கள் இரண்டு பேர், அந்த சிறுமியிடம் பேச்சு கொடுத்தவாறே அவரை ஒரு மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து, அந்த சிறுமியை அவர்கள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
தனது தங்கையை காணாமல் தவித்த சிறுமியின் அண்ணன், தங்கையைத் தேடும் போது, மறைவான இடத்தில் வைத்து, சிறுவர்கள் இருவர் பாலியல் பாலாத்காரம் செய்ததை கண்டு சத்தம் போட்டுள்ளார். பின்பு, உடனே, தனது உறவினர்களிடம் ஒடிச் சென்று கூறியுள்ளார்.
 
உடனே, பதறியடுத்துக் கொண்டு வந்த அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், அந்த சிறுமியை மீட்டு, காவல்துறையில் புகார் அளித்தனர்.
 
பின்பு, அச்சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து காவல்துறை அந்த இரு சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.