1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 4 ஜூன் 2015 (10:32 IST)

கோவாவில் காவல்துறையினர் வேடத்தில், டெல்லி இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம்

கோவாவில் காவல்துறையினர் வேடத்தில், டெல்லியைச் சேர்ந்த 2 இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் கோவாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
டெல்லியைச் சேர்ந்த இளம் பெண்கள் ரீட்டா (22), மீட்டா (30) ஆகிய இருவர் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) கோடை விடுமுறையை கழிக்க கோவா சென்றுள்ளனர்.
 
கோவாவின் இயற்கை கடற்கரை அழகை ரசிக்க, அன்ஜுனா கடற்கரைக்கு ஒரு வாடகை டாக்சியில் சென்றுள்ளனர். அவர்களது டாக்சி அர்போரா என்ற கிராமத்தின் வழியாக சென்ற போது, காவல்துறையினர் உடையில் வந்த 5 பேர் காரை வழிமறித்து, காரையும், காரினுள் இருந்த இரு பெண்களையும் சோாதனை செய்துள்ளனர்.
 
மேலும், அந்த பெண்களை அருகில், உள்ள ஒரு ஃபிளாட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
இது குறித்து டாக்சி டிரைவர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து, விரைந்த வந்த காவல்துறையினர் கடுமையாக தேடுதலை தீவிரப்படுத்தினர். அப்போது, அந்த பெண்கள் ஒரு ஃபிளாட்டில் இருந்ததை கண்டுபிடித்தனர்.
 
மேலும், காவல்துறையினர் வேடத்தில் அந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்த 5 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், டிராவர் ஜோசப், ஜீவன் பவார், கம்லேஷ் சவுத்ரி, அஜய் குமார் குஷ்வா மற்றும் நதிம் சயீத் என்பது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட 5 பேர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.