1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva

2024ன் முதல் மோசமான வேலையிழப்பு: 7500 பேரை டிஸ்மிஸ் செய்த 46 இந்திய நிறுவனங்கள்

2024 ஆம் ஆண்டு தொடங்கி இரண்டு வாரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் 46 இந்திய நிறுவனங்கள் 7500 பேரை டிஸ்மிஸ் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக ஏராளமானோர் வேலை இழந்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டில் மட்டும் 46 இந்திய நிறுவனங்களில் 7500 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
2024 ஆம் ஆண்டின் முதல் மிகப்பெரிய வேலை இழப்பு இதுதான் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. அது மட்டுமின்றி இந்த ஆண்டு இன்னும் அதிக நபர்கள் வேலை இழக்க வாய்ப்பு இருப்பதாகவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பலருடைய வேலைக்கு வேட்டுவைத்து விடும் என்றும் கூறப்படுகிறது.
 
ஆனால் அதே நேரத்தில் திறமையானவர்கள் தொடர்ந்து வேலையில் இருப்பார்கள் என்றும் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளாவிட்டால் வேலை இழப்பில் சிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது 
 
Edited by Siva