வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 18 ஜூலை 2016 (13:41 IST)

3ஆம் வகுப்பு மாணவன் தாக்கி 1ஆம் வகுப்பு மாணவன் பலி

தெலங்கானாவில் தனியார் பள்ளி ஒன்றில் 3ஆம் வகுப்பு மாணவன் தாக்கியதில் 1ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான்.


 

 
தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 3ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் 1ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை வயிற்றில் உதைத்து கடுமையாக தாக்கியுள்ளான்.
 
அதில் 1ஆம் வகுப்பு மாணவன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதுகுறித்து 1ஆம் வகுப்பு மாணவின் தந்தை காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
 
அதன்பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பள்ளி நிர்வாகத்திடம் தீவிர விசாராணை நடந்தி வருகின்றனர். மேலும் இந்த 3ஆம் வகுப்பு மாணவனின் கொலை வெறிச்செயல் பள்ளியில் உள்ள அனைவரையும் ஆதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.