1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 21 அக்டோபர் 2022 (14:01 IST)

10 கோடி டோஸ் தடுப்பூசி காலாவதியாகிவிட்டது: சீரம் நிறுவனம் தகவல்

vaccine
கொரோனா வைரஸ் தடுப்பூசியை உற்பத்தி செய்த சீரம் நிறுவனம் 10 கோடி தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டது என்றும் அதனால் தடுப்பூசி தயாரிக்கும் பணியை நிறுத்தி விட்டதாகவும் அறிவித்துள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு தடுப்பூசி தயாரித்து வழங்கி வந்த நிறுவனம் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை தான் பெரும்பாலானோர் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு பணியை தற்போது நிறுத்திவிட்டதாகவும் 10 கோடியை தடுப்பூசிகள் காலாவதி ஆகி விட்டதே இதற்கு காரணம் என்ற நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார் 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியும் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது என்றும் அதனால் தடுப்பு ஊசி தயாரிப்பு நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva