வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Siva
Last Modified: ஞாயிறு, 8 ஜனவரி 2023 (10:35 IST)

கோவையில் இருந்து சார்ஜாவுக்கு கரும்பு ஏற்றுமதி: விவசாயிகள் மகிழ்ச்சி

sugar cane
கோவையில் இருந்து சார்ஜாவுக்கு தமிழக விவசாயிகள் கரும்பு ஏற்றுமதி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
தமிழகத்தில் இந்த ஆண்டு கரும்பு மகசூல் நல்ல விளைச்சல் இருக்கும் நிலையில் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் விவசாயிகள் ஏற்றுமதி செய்து வருகின்றனர் 
குறிப்பாக கோவையில் இருந்து சார்ஜாவுக்கு பொங்கலை முன்னிட்டு விமானத்தில் சுமார் 600 கிலோ கரும்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
அதுமட்டுமன்றி மதுரை நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்தும் ஒரு டன் கரும்பு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
தமிழக கரும்பு வெளிநாட்டில் நல்ல விலையை பெறுவதால் தமிழக விவசாயிகள் நல்ல லாபம் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. கரும்பு விவசாயிகளின் ஏற்றுமதிக்கு தமிழக அரசு மற்றும் மத்திய அரசு கூடுதல் வசதியை செய்து தர வேண்டும் என்று விவசாயிகள் மத்தியில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
 
Edited by Siva