தொடர்புடைய செய்திகள்
- ஹமாஸ் படையினர் என நினைத்து பிணைக்கைதிகளை கொன்ற இஸ்ரேல்! – பிரதமர் நேதன்யாகு வேதனை!
- மோடியை சந்திக்கிறார் மம்தா பானர்ஜி.. அப்பாயின்மெண்ட் கொடுத்த பிரதமர் அலுவலகம்..!
- முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பயோபிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
- அந்தக் கட்சியுடன் கூட்டணி..? இறைவன் அருளால் அது நடக்கும்-சரத்குமார்
- இந்திய பிரதமர் மோடியை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது: புதின் பேட்டி..!
இத்தாலியில் முதலீடு செய்ய தயங்குகிறேன்: பிரதமர் முன் பேசிய எலான் மஸ்க்..!
இத்தாலியில் நாளுக்கு நாள் மக்கள் தொகை குறைந்து வருவதால் அந்த நாட்டில் முதலீடு செய்ய தயங்குகிறேன் என இத்தாலி நாட்டு பிரதமர் முன் எலான் மஸ்க் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இத்தாலியில் பிறப்பு விகிதாச்சாரம் குறைந்து வருவதாக வருத்தம் தெரிவித்த எலான் மஸ்க், இதே நிலை நீடித்தால் பன்னாட்டு நிறுவனங்கள் இத்தாலி நாட்டில் முதலீடு செய்ய தயங்கும் நிலை ஏற்படும் என்றும் எச்சரித்தார். இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மேலானி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் எலான் மஸ்க், பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய தீமைகள் மிகைப்படுத்தப்பட்டு வருவதாக கூறிய மஸ்க், வளிமண்டலத்தில் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவது அவசியம் என்றாலும் அதே சமயம் சுற்றுச்சூழல் கேடுகளுக்கு பெட்ரோல் டீசல் இயற்கை வாயு பயன்பாட்டை குறைக்க சொல்ல கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் மட்டுமே காற்று மாசுபடுவதற்கான காரணம் இல்லை என்றும் அவர் கூறினார்.
Edited by Siva
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
