தொடர்புடைய செய்திகள்
- நேற்று படுவீழ்ச்சி அடைந்த பங்குச்சந்தையின் இன்றைய நிலை என்ன?
- திடீரென 500 புள்ளிகளுக்கும் மேல் சரிந்த சென்செக்ஸ்.. நிப்டி நிலவரம் என்ன?
- தொடர் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு குஷி..!
- நேற்று இறங்கிய பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
- பங்குச்சந்தையில் இன்று என்ன நிலவரம்.. இன்றைய சென்செக்ஸ் நிப்டி எவ்வளவு?
வாரத்தின் முதல் நாளே சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை 9 மணிக்கு பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 333 புள்ளிகள் சரிந்து 71,270 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது
அதே போல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 110 புள்ளிகள் குறைந்து 21,672 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
இன்றைய பங்குச்சந்தையில் முக்கிய பங்குகள் அனைத்துமே சரிந்துள்ளதாகவும் குறிப்பாக ஏபிசி கேப்பிட்டல், சிப்லா, ஐடிசி, கல்யாண் ஜுவல்லர்ஸ், கரூர் வைசியா வங்கி, மணப்புரம் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva
