1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Stock Market Rallies for Second Straight Day

பங்குச்சந்தை இரண்டாவது நாளாக உயர்வு: வட்டி விகித குறைப்பு நம்பிக்கையால் ஏற்றம்!

பங்குச்சந்தை
இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றத்துடன் முடிந்தது. இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதக்குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகள் சந்தையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தின.
 
இன்றைய வர்த்தகத்தின் இறுதியில், மும்பை பங்குச்சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 313.02 புள்ளிகள் உயர்ந்து 82,693.71 ஆகவும், தேசியப் பங்குச்சந்தையின் குறியீடான நிஃப்டி 91.15 புள்ளிகள் உயர்ந்து 25,330.25 ஆகவும் நிலைபெற்றன. 
 
உயர்ந்த பங்குகள்: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பாரத் எலக்ட்ரானிக்ஸ், கோட்டக் மஹிந்திரா வங்கி, மாருதி, மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட்.
 
சரிந்த பங்குகள்: பஜாஜ் ஃபின்சர்வ், டைட்டன், ஐடிசி, மற்றும் டாடா ஸ்டீல்.
 
பட்டியலிடப்பட்ட புதிய நிறுவன பங்குகளில், ஷ்ரிங்கர் ஹவுஸ் ஆஃப் மங்களசூத்ரா 14% பிரீமியத்துடன் பட்டியலிடப்பட்டு, 13% லாபத்துடன் முடிந்தது. அர்பன் கம்பெனி பங்குகள் 57% பிரீமியத்துடன் சிறப்பான அறிமுகத்தைப் பதிவு செய்தன.
 
Edited by Mahendran
 
அடுத்த கட்டுரையில்
சைக்கிளோத்தான் சென்னை 2025': கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து மாற்றம்!