1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. சிவராத்திரி ஸ்பெஷல்
Written By Sasikala

மாசி மாதத்தில் வரும் பண்டிகைகளும் அதன் சிறப்புகளும்...!!

மகா சிவராத்திரி : மாதந்தோறும் வரும் சிவராத்திரி மிகவும் விஷேசமானது. அதிலும் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி இன்னும் விஷேசமானது. பிற மாதங்களில் வரும் சிவராத்திரியின்போது விழித்திருந்து இறைவனை வழிபடாதவர்கள் இந்த மாசி மாத மகா சிவராத்திரி நாளில் வழிபாடு செய்தால் ஆண்டு  முழுவதும் சிவராத்திரி வழிபாடு செய்த பலன்கள் கிடைக்கும்.
அந்த வகையில், வரும் 21.02.2020 வெள்ளிக்கிழமை அதாவது மாசி 9-ம் தேதியன்று அனைத்து சிவாலயங்களிலும் மகா சிவாராத்திரி வெகு விமர்சையாக  கொண்டாடப்பட உள்ளது.
 
மாசி அமாவாசை : பொதுவாகவே, அமாவாசை முன்னோர்கள் வழிபாட்டிற்குரியது. அதுவும் மாசி மாதம் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில், வரும் (23.02.2020) ஞாயிற்றுக்கிழமை அதாவது, மாசி 11ம் தேதியன்று அமாவாசை வருகிறது.
 
மாசி மகம் : மாசி மகம் மாசி மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் கடல், ஆறு, நதி உள்ளிட்ட  நீர்நிலைகளில் புனித நீராடுவார்கள். அந்த வகையில், வரும் (08.03.2020) ஞாயிற்றுக்கிழமை அதாவது, மாசி 25ம் தேதி மாசி மகத்தன்று இறைவனை தரிசனம்  செய்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
 
பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகம் வெகுசிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவே வடஇந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் நடைபெறுகிறது.
 
மாசி பௌர்ணமி : பொதுவாக பௌர்ணமி வழிபாடு அம்பிகைக்குரியது. மாசி மாத பௌர்ணமி தினம் சிவ வழிபாட்டிற்கும், முன்னோர் வழிபாட்டிற்கும் சிறந்தது. அந்த வகையில், வரும் (09.03.2020) திங்கட்கிழமை அதாவது, மாசி 26-ஆம் தேதியான பௌர்ணமி தினத்தில் இறைவனை வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.
 
அண்ணாமலையாரே வள்ளாலன் என்ற தன் பக்தனுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தது மாசி மாத பௌர்ணமி தினத்தில்தான். எனவேதான் வழக்கமாக  அமாவாசைகளில் செய்யும் சிரார்த்த காரியங்களை இன்று செய்வது விசேஷம் என்று சொல்லப்படுகிறது.
 
மகாவிஷ்ணு வழிபாடு : மாசி மாதம் மகாவிஷ்ணுவிற்கான மாதம் ஆகும். எனவே இம்மாதம் முழுவதும் மகாவிஷ்ணுவை அதிகாலையில் துளசியால் அர்ச்சித்து  வழிபட வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும்.
 
மாசி சங்கடஹர சதுர்த்தி : வாழ்வில் துயரங்கள் தீர நமக்கு வாய்த்திருக்கும் திதிகளில் சங்கடஹர சதுர்த்தியும் ஒன்று. தேய்பிறை சதுர்த்தியே சங்கடஹர சதுர்த்தி என்று போற்றப்படுகிறது. அந்த வகையில், வரும் (12.03.2020) வியாழக்கிழமை அதாவது, மாசி 29ம் தேதியன்று விநாயகப் பெருமானை வழிபட எல்லா தோஷங்களும்  நீங்கி நன்மை கிடைக்கும்.
 
காரடையான் நோன்பு : வீரமும், விவேகமும், பக்தியும் உடைய பெண்ணான சாவித்திரி எமதர்மனிடம் இருந்து கணவனைத் திரும்பப் பெற நோற்ற நோன்பே காரடையான் நோன்பாகும். இந்நோன்பு மாசி கடைசி நாளில் ஆரம்பிக்கப்பட்டு பங்குனி முதல் நாளில் முடிக்கப்படுகிறது.