1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2019 (21:17 IST)

முதல்வர் காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை

தேர்தல் பிரசாரத்துக்கு  அனைத்துக் கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமியின் காரை நிறுத்தி தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு எற்பட்டது.
அனைத்து மாநிலங்களிலும் தேர்தலுக்காக பணப்பட்டு வாடாவை தடுக்க வேண்டி தேர்தல் பறக்கும் படைகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் பெங்களூரில் இருந்து ஷாசன் பகுதிக்கு முதல்வர் குமாரசாமி தனது காரில் அவ்வழியே சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது அவரது காரை நிறுத்திய தேர்தல் பறக்கும்படை அதில் சோதனை நடத்தினர். மேலும் பாஜக கட்சிகள் நிர்வாகிகளின் வீடு தொழில்சாலைகளில் வருமான வரித்துறையினர் அண்மையில் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.