தொடர்புடைய செய்திகள்
- திமுகவும், அதிமுகவும் கள்ளக் கூட்டணி வைத்துள்ளது-டிடிவி தினகரன்!
- அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் பிரச்சார கூட்டத்திற்கு- திருட்டு தனமாக மின்சாரம் எடுத்து லைட், ரேடியோ அமைத்த திமுகவினர்!
- செத்தாலும் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் - வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கண்ணீர் மல்க பேசிய துரை வைகோ!
- தேனியில் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தால் மாதம் 2 நாள் தேனியில் உங்களோடு தங்குகிறேன் - சவால் விடுத்த உதயநிதி ஸ்டாலின்!
- கமல்ஹாசன் பரப்புரை விவரம்.. திமுகவுக்கு ஆதரவாக 11 நாட்கள் பிரச்சாரம்..!
ஓபிஎஸ் பருப்பு இங்கு வேகாது-முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்!
இராமநாதபுரத்தில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன், அன்வராஜா இராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளர் ஜெயபெருமாள் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.
விழாவில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர்:
உதயகுமாரிடம் "எடப்பாடி பழனிச்சாமி தான் அமைச்சராக இருந்த போது தன்னிடம் டெண்டர் கேட்டு தன் பின்னால் நின்றவன் என ஒருமையில் திமுக அமைச்சர் ராஜகண்ணப்பனை பேசியது குறித்து கேட்டபோது:
பதிலளித்த ஆர்.பி.உதயகுமார்,
"ராஜ கண்ணப்பன் எத்தனை கட்சிக்கு போவாரு எத்தனை முறை தோத்துருக்காறு.எனவே அவரைப்பற்றி பேச தேவையில்லை வீர வசனம் பேச எங்கிட்டயும் ஆளுங்க இருக்காங்க நாங்க பேசுனா என்ன ஆகும்னு அவருக்கே தெரியும், என கூறிய அவர் ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு அவரு கிழக்குல போவாரா? மேற்க்குல போவாரா? எங்க போவாரு எனத்தன மணிக்கு என்ன செய்வாருன்னு எங்களுக்கு தெரியும் எனவே அவரோட பருப்பு இங்க வேகாது அவர் களத்தில் இருபது நாட்கள் நிற்ப்பாரா என்பது கூட தெரியாது.
போனவாரம் ஒரு ஸ்டண்டு இன்னைக்கி ஒரு ஸ்டண்டு நாளைக்கி ஒரு ஸ்டண்டு எடுக்குற ஒரு நிலையில்லாத மனிதரைப்பற்றி பேசி காலத்தையும் நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
