வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: சனி, 12 ஜூன் 2021 (22:59 IST)

நமசிவாய மந்திரத்தின் பொருள்...!

திருமூலர் சொல்கிறார் மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்று, அதாவது மனது செம்மையாக மந்திரம் ஜெபிக்க வேண்டும் என்பது இதன்  பொருளாகும். மனதை செம்மைப்படுத்த ஒருநிலையாக்க மந்திரம் என்பது அவசியம். 
 
நமசிவாய மந்திரம் நம் கை விரல்களில் இருக்கின்றன.
 
சுண்டு விரல் ‘ந’ நிலத்தின் சக்தி ‘ரம்’ என்ற மந்திரம்.
 
மோதிர விரல் ‘ம’ வீர சக்தி ‘லம்’ என்ற மந்திரம்.
 
நடு விரல் ‘சி’ நெருப்பு சக்தி ‘யம்’ என்ற மந்திரம்.
 
குரு விரல் ‘வா’ காற்று சக்தி ‘வம்’ என்ற மந்திரம்.
 
பெரு விரல் ‘ய’ ஆகாய சக்தி ‘அம்’ என்ற மந்திரம்.