தொடர்புடைய செய்திகள்
- ஏழரை சனியின் பிடியை விலக்கி நலம் தரும் புரட்டாசி விரதம்!
- திருநள்ளாறு சனீஸ்வர் கோவில் பிரமோற்சவ விழா
- தினமும் லலிதா சகஸ்ரநாமம் சொல்வதால் இவ்வளவு பலன்களா?
- குரு பகவான் எந்த கட்டத்தில் சேர்ந்தால் என்ன பலன்! – குரு சேர்க்கை பலன்கள்!
- சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம்! – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
நாளை சனிப்பெயர்ச்சி .. திருநள்ளாறில் சிறப்பு ஏற்பாடுகள்..!
ஒவ்வொரு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனி பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயரும் நிலையில் நாளை சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது
நாளை மாலை 5 20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்பராசிக்கு சனிபகவான் இடப்பெயர்ச்சிக்கு செய்ய இருக்கும் நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருநள்ளாறில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனை ஆன்லைன் நடைபெற்று வருவதாகவும் அபிஷேகம் உள்பட அர்ச்சனைகளுக்கும் கட்டணடிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
அதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசு போக்குவரத்தின் சார்பில் திருநள்ளாறுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் சென்னை, கோவை, மதுரை, ஈரோடு, இராமநாதபுரம், சேலம் ஆகிய இடங்களில் இருந்து 200 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
