1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. Kala Bairavar worship is good for family

கடன் பிரச்சனை தீர வேண்டுமா? இந்த விரதம் இருங்கள்..!

கடன்
கடன் பிரச்சனை தீர்வதற்கு தேய்பிறை அஷ்டமியில் பைரவர் விரதம் இருக்க வேண்டும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
அஷ்டமி என்பதே பைரவருக்கு உகந்த நாள் என்ற நிலையில் தேய்பிறை அஷ்டமி என்பது பைரவருக்கு மிக மிக உகந்த நாள் என்று கூறப்படுகிறது. காலபைரவரை கண்கண்ட தெய்வம் என்று வணங்கி வருபவர்கள் அனைவருக்கும் எந்த விதமான பிரச்சனையும் இருக்காது என்றும் குறிப்பாக காலபைரவரை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வணங்கி விரதம் இருந்தால் கடன் பிரச்சனைகள் அனைத்தும் தவிர்ப்போடி ஆகும் என்றும் கூறப்படுகிறது. 
 
அனைத்து சிவ ஆலயங்களில் காலபைரவருக்கு என்று தனி சன்னதி அமைந்திருக்கும் என்றும் அஷ்டமி நாளில் காலை மாலை இரு வேளையிலும் பைரவருக்கு அபிஷேகம் செய்து விரதம் இருந்தால் கடன் பிரச்சனை உள்பட அனைத்து பிரச்சினைகளும் விலகிவிடும் என்றும் கூறப்படுகிறது. 
 
குறிப்பாக ராகுகால வேளையில் பைரவரை வணங்கினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
இந்த ராசிக்காரர்களுக்கு பணியில் கவனம் தேவை! இன்றைய ராசிபலன் (10-07-2023)!