தொடர்புடைய செய்திகள்
- சகல செளபாக்கியங்களை அள்ளி தரும் ஆடி வெள்ளி
- ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக இருப்பது ஏன்....?
- ஆடி மாதத்திற்கும் வேப்ப மரத்திற்கும் என்ன சம்பந்தம் தெரியுமா...?
- ஆடி மாத செவ்வாய்க்கிழமையில் கடைப்பிடிக்கப்படும் ஒளவையார் விரதம்...!!
- ஆடி மாத ஏகாதசியில் மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் இருப்பதால் உண்டாகும் பலன்கள்...!!
இன்று ஆடி வெள்ளி பௌர்ணமி!!
ஆடி மாதம் வெள்ளிக்கிழமையான இன்று பௌர்ணமியில் பொதுவாக அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
பௌர்ணமியில் பொதுவாக அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அம்மன் கோவில்களில் விளக்கு பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெறுகின்றன. பௌர்ணமி அன்று விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது.
சித்திரை பௌர்ணமி:
சித்திரை மாத பௌர்ணமி சித்ரா பௌர்ணமி என்றழைக்கப்படுகிறது. சித்திரை மாதத்தில் பொதுவாக சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறது. சித்திர குப்தனின் பிறந்த நாளாக சித்திரை பௌர்ணமி கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் விளக்கேற்றி வழிபாடு செய்ய நீடித்த ஆயுள் கிடைக்கும். மரண பயம் நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும்.
கிரிவலம்:
பொதுவாக பௌர்ணமியில் கிரிவலம் செய்வது சிறப்பானது. மலையினை சுற்றி வருவதால் மனத்திற்கு அமைதியும் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும். கூட்டமாக பாடல்களை பாடிக் கொண்டு சுற்றும்போது ஆன்ம பலமும், தேக பலமும் கிடைக்கும். கார்த்திகை பௌர்ணமியில் திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
