செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

அழகான மற்றும் மிருதுவான சருமத்தை பெற எளிய அழகு குறிப்புகள்...!!

1 தேக்கரண்டி பாதாம் எண்ணெய்யை 1/3 தேக்கரண்டி படிகாரத்தூளுடன் நன்கு கலக்கவும். இந்தக் கலவையை உங்கள் தோல் மீது மெதுவாக தடவி மிருதுவாக  மசாஜ் செய்யவும். 


அதன் பின்னர், வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு உங்களுடைய முகத்தை கழுவ வேண்டும். பளபளப்பான சருமத்தைப் பெற இந்த  முகப்பூச்சை ஒரு மாதத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தவும்.
 
குறிப்பு 2:
 
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் 1/2 தேக்கரண்டி பாதாம் எண்ணெயை கலக்கவும். முகத்தின் மீது இதைத் தடவி சுமார் 15 நிமிடங்களுக்கு உலர விடவும். அதன் பின்னர் உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். அழகான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற இந்தக் கலவையை ஒரு வாரத்திற்கு 2-3  முறை பயன்படுத்தவும்.
 
குறிப்பு 3:
 
1/2 தேக்கரண்டி பாதாம் எண்ணெயுடன் 1 தேக்கரண்டி பச்சை தேயிலையை நன்கு கலக்கவும். அதன் பின்னர இந்தக் கலவையைப் பயன்படுத்து உங்களுடைய முகத்திற்கு மெதுவாக மசாஜ் செய்யவும். அதன் பின்னர், மிருதுவான சுத்தப்படுத்தி மற்றும் வெவெதுப்பான நீர் வைத்து உங்களுடைய முகத்தை சுத்தம் செய்யவும்.
 
குறிப்பு 4:
 
ஒரு கிண்ணத்தில் பாதாம் எண்ணெயை 1 தேக்கரண்டி விட்டு, அதனுடன் 2-3 சொட்டு ரோஜா எண்ணெய் சேர்க்கவும். கலவையை நன்கு கலந்த பின்னர், அதை முகத்தில் மிகவும் மிருதுவாகத் தடவவும். 5-10 நிமிடங்கள் கழித்து, மிருதுவான சுத்தப்படுத்தி மற்றும் வெவெதுப்பான நீர் வைத்து உங்களுடைய முகத்தை சுத்தம்  செய்யவும்.
 
குறிப்பு 5:
 
வெள்ளரிக்காயின் ஒரு சில துண்டுகளை நன்றாக நசுக்கி அதை 1 தேக்கரண்டி பாதாம் எண்ணெய்யுடன் நன்கு கலக்கவும். இந்தக் கலவையை உங்கள் முகத்தில்  நன்கு தடவி, அதை 10 நிமிடங்களுக்கு உலர விடவும். அதன் பின்னர் மிருதுவான சுத்தப்படுத்தி மற்றும் வெவெதுப்பான நீர் வைத்து உங்களுடைய முகத்தை  சுத்தம் செய்யவும். அழகான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெற இதை வாரத்திற்கு 2 முறை இதை முயற்சி செய்யவும்.