1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

கேரட் ஃபேஸ் மாஸ்க் போடுவதன் மூலம் கிடைக்கும் பலன்கள் !!

கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது ப்ரீ-ராடிக்கல்களால் சருமத்தில் ஏற்படுத்து பாதிப்புக்களைத் தடுத்து, சரும செல்களுக்கு பாதுகாப்பளிக்கும்.

முக்கியமாக கேரட்டில் இருக்கும் வைட்டமின் சி, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை குறைப்பதோடு, சூரியக்கதிர்களால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்கும்.
 
கேரட் கொலாஜன் உற்பத்திக்கு உதவி புரிந்து, சரும அழகை மேம்படுத்தும். கேரட்டில் இருக்கும் பொட்டாசியம், சரும செல்களுக்கு நீர்ச்சத்தை வழங்கி, சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கும்.
 
குறிப்பாக கேரட்டில் இருக்கும் முக்கியமான உட்பொருளான பீட்டா-கரோட்டீன், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, புதிய சரும செல்களின் உருவாக்கத்தை ஊக்குவிக்கிறது.
 
1. தேவையான பொருட்கள்:  கேரட் பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன், தேன்- 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு - 1/2 டேபிள் ஸ்பூன்.
 
செய்முறை: முதலில் கேரட்டை துண்டுகளாக்கி, 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின் வேகவைத்த கேரட்டை நன்கு மசித்து, அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
 
பின்பு அதனை முகத்தில் தடவி 20-30 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை போட்டால், பருக்களை உண்டாக்கும் கிருமிகள் அழிந்து, சீக்கிரம் பருக்கள் காணாமல் போகும்.
 
2. கரும்புள்ளிகள் மறைய - தேவையான பொருட்கள்:  கேரட் பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன், சந்தன பவுடர் - 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு- 1/2 டேபிள் ஸ்பூன்.
 
செய்முறை: கேரட்டை துண்டுகளாக்கி, 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அந்த கேரட்டை நன்கு மென்மையாக மசித்து, அதோடு சந்தன பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
 
பிறகு தயாரித்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்ய வேண்டும்.