வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By

இந்த பழங்களும் காய்களும் ஆபத்தனவையா???

காய்கறிகளும், பழங்களும் ஆரோக்கியமானவையாக இருந்தாலும் சில சத்துகள் அல்லது அளவுக்கு அதிகமாக அதை உட்கொள்ளும்போது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. 
 
# உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள், அதன் தோலை சுத்தம் செய்வதன் மூலம் நாம் இழந்துவிடுகிறோம். இதில் உள்ள சத்துக்கள் மறைந்து கொழுப்பு போன்ற தீமைகள் மட்டுமே கிடைக்கிறது.
 
# சிட்ரஸ் அமிலங்கள் நிறைந்த பழங்களான ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்றவை பழமாக சாப்பிடும்போது மட்டும்தான். அவை பழச்சாறாக மாறும் போது அதில் உள்ள சர்க்கரை மற்றும் கலோரிகளின் அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது அல்ல.
 
# மாம்பழம் உள்ள வைட்டமின்கள் மற்றும் நீர்சத்துக்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. ஆனால் இதில் உள்ள 31கி சர்க்கரை பெரும் ஆபத்தை விளைவிக்கும். 
 
# நார்ச்சத்துகள் நிறைந்துள்ள இந்த பட்டாணியில் அதிகளவு கலோரிகள் மற்றும் கார்போஹட்ரேட்டுகள் உள்ளதால் இது எடை அதிகரிப்பிற்கு காரணமாக இருக்கிறது.
 
# திராட்சை அடைக்கப்பட்ட உணவுகளை விட பழங்கள் சாப்பிடுவது எப்போதும் ஆரோக்கியமான ஒன்று. திராட்சையில் உள்ள சர்க்கரை அளவு உடலுக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும். 
 
# கத்திரிக்காயை உணவில் அதிகம் சேர்க்கப்படும்போது அது உங்கள் உடலில் கலோரிகள் மற்றும் சோடியத்தின் அளவை அதிகரிக்கிறது.
 
# தேங்காயில் அதிக அளவு கொழுப்பு இருப்பதால் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்பின் அளவை அதிகரிக்க கூடியது.