வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Annakannan
Last Modified: வியாழன், 17 ஜூலை 2014 (12:06 IST)

அபுதாபி நிறுவனத்திற்கு ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் தேவை

அபுதாபியிலுள்ள ஒரு முன்னணி நிறுவனத்திற்கு ஐடிஐ தேர்ச்சியுடன் 6 வருட பணி அனுபவம் பெற்ற தொழில்நுட்பப் பணியாளர்கள் தேவை. இது தொடர்பாகத் தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OVERSEAS MANPOWER CORPORATION LTD) வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு
 
அபுதாபியிலுள்ள ஒரு முன்னணி நிறுவனத்திற்கு ஐடிஐ தேர்ச்சியுடன் 6 வருட பணி அனுபவம் பெற்ற சட்டரிங் கார்பெண்டர்கள், ஸ்டீல் பிக்ஸ்சர்கள், ஏசி டெக்னிசியன்கள் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்ற உதவி சட்டரிங் கார்பெண்டர்கள், உதவி ஸ்டீல் பிக்ஸ்சர்கள் தேவை. இவர்களுக்கான நேர்முகத் தேர்வு, தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடைபெற உள்ளது. 
 
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்குத் தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இருப்பிடம், உணவு, மருத்துவ காப்புறுதி, மிகைநேரப் பணி ஊதியம் ஆகியவை வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும். 
 
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள், ஒரிஜினல் பாஸ்போர்ட் மற்றும் நீலநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட மூன்று புகைப்படத்துடன் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், எண்.42, ஆலந்தூர் ரோடு, கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் 19.7.2014 அன்று காலை 8.30க்கு நடைபெறும் நேர்முகத் தேர்விற்கு நேரில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 
 
மேலும் விவரங்கள் அறிய, 044-22505886 / 22502267 / 9444696724 என்ற தொலைபேசி எண்களை அழைக்கலாம். அல்லது www.omcmanpower.com என்ற இணையத்தளத்தில் அறியலாம். 
 
இதனை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.