ஜியோ அன்லிமிட்டெட்: அம்பானியின் அதிரடி மாற்றங்கள்!!

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 3 அக்டோபர் 2017 (13:28 IST)
ஜியோ நிறுவனம் இலவசங்களை வழங்கி வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்தது. அதன் பின்னர் குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா வழங்கி பயனர்களை தக்கவைத்து கொண்டது.


 
 
ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல், ஐடியா, வோட்போன் மற்றும் பொதுத்துறை நெட்வொர்க்கான பிஎஸ்என்எல் ஆகியவை பல சலுகைகளை அளித்து வரும் நிலையில், அம்பானி ரூ.149 ஜியோ அன்லிமிட்டெட் சலுகையை வெளியிட்டுள்ளார்.
 
அதாவது ரூ.149 ரிசார்ஜ் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தில் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படவுள்ளது.
 
மேலும், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்கவுள்ளது.  
 
தினமும் வழங்கப்படும் 2 ஜிபி டேட்டா 4ஜி வேகத்தில் பயன்படுத்த முடியும். 2 ஜிபி டேட்டாவின் பயன்பாடு முடிந்ததும் 4ஜி வேகம் குறைக்கப்படும். 
 
ஆனால் இதிலும் ஒரு சலுகை உள்ளது டேட்டா வேகம் நொடிக்கு 128 கேபி-யாக குறைக்கப்படுவது தற்போது நொடிக்கு 64 கேபி-யாக குறைக்கப்படுமாம்.
 
அதேபோல் ஜியோவின் ரூ.96 திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், 1 ஜிபி இண்டர்நெட் தினமும் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 7 நாட்கள் ஆகும். 

எல்லாம் காட்டு

டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு விற்றால் வேலை காலி!.. 10 ஆயிரம் அபராதம்...

டெல்லியில் போராடும் மாணவர்கள்!. ரூ.67,734க்கு பீட்சா அனுப்பிய இளைஞர்!.. நெகிழ்ச்சி செய்தி!..

வீட்டின் முன்பு மாந்திரீக பூஜை!.. ஜிபி முத்து மீது தாக்குதல்!...

நாளை வரை அவகாசம் கேட்ட பாஜக!.. தர்மேந்திர பிரதான் பதவி பறிக்கப்படுமா?...

லண்டன் ஓட்டலில் மர்மமாக உயிரிழந்த சவுதி இளவரசர்.. 8 மாதம் கழித்து வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்..

அடுத்த கட்டுரையில்
Show comments