1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 12 ஏப்ரல் 2023 (15:19 IST)

சென்னையில் ஐபிஎல் போட்டி: இன்று நள்ளிரவு வரை மெட்ரோ ரயில் இயங்கும் - மெட்ரோ ரயில் நிர்வாகம்

chennai kings
சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளதால்  இன் நள்ளிரவு 1 மணிவரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐபிஎல்-2023 -16 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், மொத்தம் 10 அணிகள் இடம்பெற்று விளையாடி வருகின்றனர்.

இந்த முறை யார் கோப்பையைக் கைப்பற்றுவது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் எழுந்துள்ள நிலையில், அணைத்து அணிகளும் சிறப்பாக விளையாடி வருகின்றன.

இந்த நிலையில்,  இன்று சென்னை சேப்பாக்கத்தில், ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளன.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளதால்  இன் நள்ளிரவு 1 மணிவரை , 5 முதல் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.