இந்தியா ஹைப்பர்சானிக் ஆயுதத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துகிறது - அமெரிக்க அறிக்கை

உலகில் ஹைப்பர்சானிக் தொழில்நுட்பத்தை மேம்படுத்திவரும் நாடுகளில் இந்தியாவும் இருப்பதாக அமெரிக்க அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நாடாளுமன்ற ஆய்வு சேவை என்ற அமைப்பு வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இந்தத் தகவல் இடம் பெற்றுள்ளது.
 
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை மேம்பட்ட ஹைப்பர்சானிக் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. ஆனால், இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் முதலியவையும் ஹைப்பர்சானிக் ஆயுதங்களை மேம்படுத்திவருகின்றன என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
 
ஆஸ்திரேலியா அமெரிக்கக் கூட்டுறவுடனும், இந்தியா ரஷ்யக் கூட்டுறவிலும் இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்திவருகின்றன என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
 
இது தவிர, ஹைப்பர்சானிக் தொழில்நுட்ப டெமான்ஸ்ட்ரேட்டர் திட்டத்தின்கீழ் இந்தியா தன் சொந்த ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

எல்லாம் காட்டு

ராஜினாமா பண்ணிட்டு வாங்க!.. அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு வலை விரிக்கும் தவெக!..

5 தொகுதி இடைத்தேர்தல்!.. குழப்பத்தில் அதிமுக!. ஸ்கெட்ச் போடும் திமுக!....

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments