1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 6 மே 2015 (14:06 IST)

ஆப்கான் பெண் கொலை : 4 பேருக்கு மரண தண்டனை

ஆப்கானின் காபூல் நகரில், ஒரு பெண்ணை, ஒரு கும்பல் கொலை செய்த சம்பவத்தில் பங்கேற்ற நான்கு ஆண்களுக்கு நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை வழங்கியுள்ளது.
 


குரானின் பிரதி ஒன்றை எரித்ததாக பொய்யாகக் குற்றஞ்சாட்டப்பட்ட, பர்குந்தா என்னும் அந்தப் பெண்ணை ஆத்திரம் கொண்ட கும்பல் ஒன்று அடித்துக் கொன்றது.
 
இந்த வழக்கில் மேலும் 8 பேருக்கு 16 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தடுக்க தவறிய 19 போலிஸாருக்கு எதிரான தீர்ப்பு ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
தண்டனை வழங்கப்பட்ட அனைவரும் மேன்முறையீடு செய்ய முடியும். குற்றஞ்சாட்டப்பட்ட மேலும் 18 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்த கொலை சர்வதேச மட்டத்தில் பெரும் கண்டனைத்தை ஏற்படுத்தியதுடன், பெண்கள் முறையாக நடத்தப்படாமைக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் பெரும் ஆர்ப்பாட்டங்களையும் தூண்டியது.