தொடர்புடைய செய்திகள்
- சிக்கல் தரும் சீன மக்கள்தொகை: குறையும் பிறப்பு விகிதம்; அதிகரிக்கும் முதியவர்கள்
- இந்தியா - சீனா எல்லை மோதல்: மைக்ரோ வேவ் ஆயுதங்கள் ஆயுதங்களை பயன்படுத்தியதா சீனா? அப்படி என்றால் என்ன?
- வெளிநாட்டு நாணயங்களுக்கு தாலிபன்கள் தடை
- COP26 பருவநிலை மாநாட்டுக்கு வராதது மிகப்பெரிய தவறு - சீனா மற்றும் ரஷ்யாவை விமர்சித்த ஜோ பைடன்
- தீபாவளி உணவுகள்: தென்னிந்தியாவுக்கும் வடஇந்தியாவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் குவிக்கும் சீன மக்கள்
ஒருவேளை அவசர நிலை ஏற்பட்டால் அப்போது பயன்படுத்துவதற்கு தேவையான அளவு அத்தியாவசியப் பொருட்களை சேகரித்து வைத்துக் கொள்ளுமாறு சீன அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆனால் இந்த அறிவிப்பு ஏன் வெளியிடப்பட்டது என்று, அதை வெளியிட்ட சீன வர்த்தக அமைச்சகம் காரணம் எதையும் தெரிவிக்கவில்லை.
சீனாவின் பல்வேறு பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பொதுமுடக்கம் மற்றும் வழக்கத்திற்கு மாறான அதிக மழையால் பயிர்கள் பாதிப்படைந்துள்ளதால் தடைபட்டுள்ள காய்கறி விநியோகம் ஆகியவற்றுக்கு நடுவே சீன அரசின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
உணவுப் பொருட்களுக்கான விநியோகச் சங்கிலி சீராக இருப்பதையும், உணவுப் பொருட்களின் விலை ஏறாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று உள்ளூர் அதிகாரிகளுக்கு சீன வர்த்தக அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.