தொடர்புடைய செய்திகள்
- விவேக்கை குறிவைத்து நடந்த ரெய்ட்? முதல் முறையாக நிருபர்கள் முன் தோன்றி விளக்கம்!!
- ரூ. 1430 கோடி வரி ஏய்ப்பு ; 60 போலி நிறுவனங்கள் - ரவுண்டு கட்டி அடித்த சசிகலா குடும்பம்
- விவேக்கை மீண்டும் விசாரணைக்கு அழைக்க உள்ள வருமான வரித்துறை!
- விவேக் வீட்டில் கள்ளத்துப்பாக்கி - வருமான வரித்துறையினர் அதிர்ச்சி
- சசிகலா குடும்பத்தில் 10க்கும் மேற்பட்டோர் கைது? - களம் இறங்கும் சிபிஐ,அமலாக்கத்துறை
ரெய்டுக்கு காரணம் நமது எம்ஜிஆர் நாளிதழா?
சசிகலா குடும்பத்தினர் மீதான ரெய்டுக்கு அரசியல் காரணம் உள்பட எத்தனையோ காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கிய காரணம் நமது எம்ஜிஆர் நாளிதழ்தான் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இந்த நாளிதழில் சோ.க.’, ‘ராக்கெட் ராமசாமி’, ‘சோழ அமுதன் ஆகிய பெயர்களில் வெளியான கட்டுரைகள் மத்திய அரசையும், உபி அரசையும் கடுமையாக தாக்கி எழுதப்பட்டிருந்ததாம். குறிப்பாக மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் குழந்தைகள் இறந்த விவகாரம் குறித்து கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்யப்பட்டிருந்தது
நாளிதழ், டிவி, பணம், ஆகியவற்றை வைத்து கொண்டுதான் இந்த ஆட்டம் போடுவதாக நினைத்த மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக, மூன்றையும் முடக்கும் நோக்கத்தில்தான் இந்த ரெய்டு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தினகரன் மட்டுமின்றி சசிகலா குடும்பத்தில் இனிமேல் யாருமே அரசியல்ரீதியாக எழுந்து வரக்கூடாது என்ற நோக்கத்திலும் ரெய்டு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
