வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 4 அக்டோபர் 2016 (17:01 IST)

தமிழக உள்ளாட்சி தேர்தல்: வார்டு உறுப்பினர் பதவி ரூ.10 லட்சத்துக்கு ஏலம்

வேலூர் மாவட்டத்தில் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவியை ரூ.10 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


 

 
வேலூர் மாவட்டம் சோளிங்கர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. அதில் 3வது வார்டு எசையனூர் மற்றும் அருந்ததிபாளையம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது.
 
அருந்ததிபாளையம் கிராமத்தில் 130 வாக்குகள் உள்ளன. இரண்டு நாட்களுக்கு முன் வார்டு உறுப்பினர் பதவி ஏலம் விடப்பட்டதாகவும், 10 லடசத்து 97 ஆயிரம் ரூபாய்க்கு வார்டு உறுப்பினர் பதவியை ஒருவர் ஏலம் எடுத்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
 
மேலும் இது தொடர்பாக அப்பகுதி மக்கள், காவல்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.