Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக உள்துறைச் செயலாளர் அதிரடி மாற்றம்

Written By sivalingam
Updated: வெள்ளி, 3 மார்ச் 2017 (22:34 IST)
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றவுடன் முதல்முறையாக முக்கிய அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி தமிழக உள்துறை செயலாளராக இருந்த அபூர்வ வர்மா அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.


 


அபூர்வ வர்மாவுக்கு பதிலாக தமிழகத்தின் புதிய உள்துறைச் செயலாளராக நிரஞ்சன் மார்டி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே கடந்த 2013-ம் ஆண்டு தமிழக உள்துறைச் செயலாளராக பணியாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உள்துறைச் செயலாளராக இருந்த அபூர்வ வர்மா சுற்றுலாத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக நிர்வாக இயக்குநராக உமாநாத் என்பவர் நியமனம் செய்யப்படுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு சிறுதொழில் நிறுவன மேம்பாட்டுக் கழக இயக்குநராக செல்வி அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

ரூ.88 கோடி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய பெண் கணவருடன் கைது... சிபிஐ அதிரடி நடவடிக்கை...

இன்று ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு ரூ. 2,240 உயர்ந்து அதிர்ச்சி

மீனவர்களுக்கான நிதியை குறைத்துவிட்டதா தவெக பட்ஜெட்.. உண்மை என்ன?

இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டாலும் காவல்துறை பொறுமையாக கையாள வேண்டும்: சிஜேபி போராட்டம் குறித்து நீதிமன்றம்..

தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் திருப்தி இல்லை: கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments