தமிழக உள்துறைச் செயலாளர் அதிரடி மாற்றம்

வெள்ளி, 3 மார்ச் 2017 (22:30 IST)
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றவுடன் முதல்முறையாக முக்கிய அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி தமிழக உள்துறை செயலாளராக இருந்த அபூர்வ வர்மா அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.


 


அபூர்வ வர்மாவுக்கு பதிலாக தமிழகத்தின் புதிய உள்துறைச் செயலாளராக நிரஞ்சன் மார்டி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே கடந்த 2013-ம் ஆண்டு தமிழக உள்துறைச் செயலாளராக பணியாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உள்துறைச் செயலாளராக இருந்த அபூர்வ வர்மா சுற்றுலாத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக நிர்வாக இயக்குநராக உமாநாத் என்பவர் நியமனம் செய்யப்படுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு சிறுதொழில் நிறுவன மேம்பாட்டுக் கழக இயக்குநராக செல்வி அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

சனாதானம் கண்டிப்பாக தேவை!.. நடிகர் அர்ஜூன் பேட்டி!...

தவெகவில் இணையும் சி.வி. சண்முகம்?!.. அதிர்ச்சியில் அதிமுக!..

கடைகளை திறக்காத டாஸ்மாக் ஊழியர்கள்!.. தனியார் பார்களில் குவியும் மதுப்பிரியர்கள்!..

டெல்லியில் திருவள்ளுவர் சிலையை திறந்துவைக்காமல் சென்னை திரும்பிய விஜய்!..

விஜய் பற்றிய செய்தி!.. 46ம் இடத்திற்கு தள்ளப்பட்ட புதிய தலைமுறை!.. பின்னணியில் யார்?..

அடுத்த கட்டுரையில்
Show comments