தேர்தல் முடிவு குறித்து ஜோதிட கணிப்பு: தேர்தல் ஆணையம் தடை

வெள்ளி, 31 மார்ச் 2017 (06:10 IST)
தேர்தல் என்று வந்துவிட்டாலே தேர்தல் கணிப்புகளும் கூடவே வந்துவிடும். பல லட்சம் வாக்காளர்கள் இருக்கும் ஒரு தொகுதியில் ஒருசில நூறு மக்களிடம் மட்டுமே கருத்துகேட்டு பல ஊடகங்கள் தேர்தல் கணிப்பு என்ற பெயரில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்த கணிப்புகள் பெரும்பாலும் பொய்த்து போவதுதான் வழக்கமாக இருந்து வருகிறது


 


இந்நிலையில் ஊடகங்கள் மட்டுமின்றி பிரபல ஜோதிடர்களும் தேர்தலில் பெற்று வருவது யார்? தோல்வி அடைவது யார்? என்று அவரவர்களின் ராசியை வைத்து கூறி விளம்பர நோக்கத்துடன் செயல்படுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு தடை இருக்கும்போது ஜோதிட கணிப்புகளையும் வெளியிடக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஜோதிடர்கள் மூலம் நடத்தும் தேர்தல் முடிவுகள் சட்டவிதிகளுக்கு முரணானது என தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

நீங்க டைம் எடுத்து கத்துக்கிற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம்.சார்!.. உதயநிதி கோபம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments