1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 8 ஜூலை 2015 (19:38 IST)

’குப்பி கடித்து மரணம் அடையாதவர்கள் போராளிகள் இல்லை’ - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

இறுதி யுத்தத்தில் குப்பி கடித்து மரணம் அடையாதவர்கள் எவருமே தம்மை முன்னாள் போராளிகள் என அடையாளப்படுத்த முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
 
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக நேற்று வவுனியாவில் சம்பந்தன் தலைமையிலான கூட்டம் நடைபெற்றது.
 
அப்போது, ஜனநாயகப் போராளிகள் என்ற அமைப்புத் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில் சிவஞானம் ஸ்ரீதரன் கருத்துத் தெரிவிக்கையில், ”இறுதி யுத்தத்தின் பொழுது குப்பி கடித்து வீர மரணம் அடையாத எவருமே தம்மை முன்னாள் போராளிகள் எனத் தெரிவிக்க முடியாது” என்று தெரிவித்தார்.