திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்: கனிமொழி
திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்த்லின் வாக்குப்பதிவு நாளான இன்று அனைத்து கட்சியினரும் தங்கள் வாக்குப்பதிவை செய்து கொண்டிருக்கின்றனர்.
திமுக எம்.பி கனிமொழி சென்னை மயிலாப்பூர் தொகுதியில் வாக்களித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று நம்பிகையுடன் கூறினார்.
இந்த முறை பிரபல நடிகர்களும், கட்சியினர்களும் அவர்களுக்கான தொகுதியில் வாக்களிப்பை நேரமே தொடங்கினர்.