தொடங்கியது தயாரிப்பாளர் லலித் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் படம்!
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித். அவர் தன்னுடைய நிறுவனம் சார்பில், அசுரவதம், குரு, சர்பத், துக்ளக் தர்பார், மகான், காத்துவாக்குல் ரெண்டு காதல், மாஸ்டர் மற்றும் லியோ உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்துள்ளார்.
விஜய்க்கு மிகவும் நெருக்கமானவராக இருக்கும் லலித், அடுத்து தன்னுடைய மகன் அக்ஷய் குமாரைக் கதாநாயகனாக ஆக்கியுள்ளார். இந்த படத்துக்கான கதையை டாணாக்காரன் இயக்குனர் தமிழ் எழுத வெற்றிமாறனின் இணை இயக்குனராக சுரேஷ் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் விக்ரம் பிரபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் நேற்று இந்த படத்தின் பூஜை தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.