கார்த்தியின் ‘வா வாத்தியார்’ பட ரிலீஸ் தாமதத்துக்கு சூர்யாவின் ‘கங்குவா’தான் காரணமா?
மெய்யழகன் படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் நீண்டகாலமாக நடந்த நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது.
நீண்டகாலமாக இந்த படம் பற்றி எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த மாதம் படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. போலீஸ் கெட்டப்பில் கார்த்தி காரில் இருந்து இறங்க, அவரை மேள தாளத்தோடு வரவேற்கிறது ஒரு கூட்டம். அவர்களோடு சேர்ந்து கார்த்தி அலட்டல் இல்லாத ஆட்டம் போட செம்ம vibe ஆன இசையைக் கொடுத்துள்ளார் சந்தோஷ் நாரயணன். இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் இதுவரை ரிலீஸாகவில்லை.
இந்நிலையில் வா வாத்தியார் ரிலீஸில் இருக்கும் சிக்கல் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இதற்கு முன்னர் தயாரித்திருந்த கங்குவா படத்தால் 140 கோடி ரூபாய்க்கு மேல் கடன் உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த கடன் பிரச்சனைகளால் இப்போது வா வாத்தியார் படம் ரிலீஸாவதில் சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக சூர்யா, ஞானவேல் ராஜாவுக்கு இரண்டு படங்களில் சம்பளம் இல்லாமல் நடித்துக் கொடுப்பதாக உறுதியளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.