யாரையும் காதலிக்கலை - நடிகை தன்னிலை விளக்கம்
யாரையும் காதலிக்கலை - நடிகை தன்னிலை விளக்கம்
"நான் யாரையும் காதலிக்கலை, சினிமாவில்தான் முழுக்கவனமும் இருக்கிறது..." இப்படியொரு ஸ்டேட்மெண்ட் சொல்லாத நடிகைகள் இந்திய சினிமாவில் இல்லை.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இந்த தத்துவ முத்துக்கள் அவர்களின் வாயிலிருந்து உதிரும்.
தெகிடியோடு காணாமல் போன ஜனனி மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். அவர் நடித்துள்ள உல்டா படம் முடிந்துள்ளது. தொலைக்காட்சியின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நல்ல வேடங்கள் அமையாததே தமிழில் இடைவெளி ஏற்பட காரணம் என்றவர், நான் யாரையும் காதலிக்கவில்லை. இப்போது என்னுடைய கவனம் முழுக்க சினிமாவில்தான் உள்ளது என்றார்.
ஜனனி ஒரு நடிகரை காதலிக்கிறார் என்று ஊர் பேர் தெரியாத ஒரு வதந்திக்கு இப்படியொரு விளக்கத்தை அவர் தந்துள்ளார்.
நம்புறோம் மேடம்.