1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Webdunia
Last Modified: புதுடெல்லி , திங்கள், 22 பிப்ரவரி 2010 (19:47 IST)

நாடாளுமன்றம் அருகே தெலங்கானா ஆதரவாளர்கள் போராட்டம்

தெலங்கானா மாநிலத்தை விரைவில் உருவாக்க கோரி நாடாளுமன்றம் அருகே தெலங்கானா ஆதரவாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற அவர்கள், டெல்லியின் மையப் பகுதியான ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் நாடாளுமன்றத்தின் ஐந்தாம் எண் கேட் வாயிலாக நுழைய முயன்றனர்.ஆனால் அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள், மாணவர்கள் மற்றும் தெலங்கானா ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.