பேய், ஆவிகளை ஓட்டும் அதிசய சாக்கடைக் குட்டை
|
அந்த இடத்திற்கு நாங்கள் காலையில் சென்றோம். நுழைவாயிலில் இரண்டு பெண்கள் ஒரு அசாதாரணமான நிலையில் இருந்ததைக் கண்டோம், ஜமுனா பாய், கௌசர் பி என்ற அந்த இரண்டு பெண்கள் எங்களைப் பார்த்து ஏதோ கூச்சலிட்டபடி இருந்தார்கள்.
|
இரண்டு வாரமா இங்குதான் இருக்கின்றோம், வந்ததிலிருந்து இப்படித்தான் கத்திக்கிட்டே இருக்கா, ஆனா இந்த சிகிச்சைக்கு பிறகு குணமாயிடும் என்று நம்புவதாகக் கூறினார்.
|
இது என்ன என்று இமாம் தைமுரியிடம் வினவினோம். இது போன்று பேய், ஆவி பிடித்தவர்கள் இங்கு குளிப்பார்கள். அதன்பிறகு சங்கிலியின் ஒரு முடிச்சு வலையிலும், அடுத்த முடிச்சு சம்பத்தப்பட்ட நபரின் கழுத்திலும் இடப்படும். இந்த சங்கிலி பிணைப்பிற்குப் பிறகு அந்த நபர் பேயின் ஆதிக்கத்திற்குள் வருவதாக நம்பப்படுகிறது. அதன் பிறகு இங்குள்ள ஒரு குளத்தில் குளிக்க வைக்கப்படுவார்கள் என்றார்.
|
சகினா என்ற சிறுமியை சந்தித்தோம். தன் தாயாரை ஆவி பிடித்திருக்கிறது என்றும், அது தன்னையும் பிடித்துவிடக்கூடாது என்பதற்காக இங்கு வந்து குளிப்பதாகவும் அவள் கூறியபோது வியப்பாக இருந்தது.
| |
|
|
நவாப் இஸ்மாயில் அலி கான் மற்றும் ஜாவ்ரா நவாப் காலத்தில் தசரா பண்டிகையும் மொகரம் பண்டிகையும் ஒரே நாளில் வந்த போது நவாப் தசராவில் பங்கேற்க முடிவு செய்தது முஸ்லிம்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது.
|
