வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: திங்கள், 2 செப்டம்பர் 2024 (14:59 IST)

கால் நடைகளின் மருத்துவ உதவிக்கான இரண்டு ஆம்புலன்ஸ்யை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்!

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக குமரி மாவட்டத்திற்கு நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி (1962 )வழித்தடம் துவங்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது.
 
இந் நிகழ்ச்சியில் 
அமைச்சர் மனோ தங்கராஜ்,மேயர் ரெ.மகேஷ்  மாவட்ட ஆட்சியர் அழகு மீனா  ஆகியோர் கலந்து கொண்டு மக்கள் பயன்பாட்டிற்காக வாகனத்தை துவங்கிவைத்தனர்.
 
இந் நிகழ்வில் மாநகர மண்டலத் தலைவர்கள் ஜவஹர் , கோகிலவாணி மாமன்ற உறுப்பினர்கள் விஜிலாஜஸ்டஸ் அமல செல்வன் மற்றும் கழக நிர்வாகிகள் மாநகர செயலாளர் ஆனந்த்மாணவரணி அருண் காந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.