காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக ஆர்.கஜலட்சுமி நியமனம்
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக ஆர்.கஜலட்சுமியை தமிழக அரசு நியமித்துள்ளது.
இது குறித்து, தமிழக அரசு தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:-
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த வி.கே.சண்முகம் பணி ஓய்வு பெற்ற காரணத்தினால், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் இணை மேலாண்மை இயக்குனர் ஆர்.கஜலட்சுமி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.