1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2015 (22:43 IST)

திமுக பிரமுகர் ராமஜெயம் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு ஜனவரி மாதத்திற்கு சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை ஒத்திவைத்து உத்திரவிட்டது.
 
கடந்த சில வருடங்களுக்கு முன்பு, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் மர்மான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை குறித்து போலீசார் தனிப்படை அமைத்தும் கண்டுபிடிக்கமுடியில்லை. இதனையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
 
ஆனால்,  ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில், சிபிசிஐடி எஸ்.பி. இந்த வழக்கின் தற்போதைய அறிக்கையை நீதி மன்றத்தில் தாக்கல் செய்தார்.
 
இதனையடுத்து, இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை, ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.