திருச்சி மாநகராட்சி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு: வேங்கை வயல் அடுத்து இன்னொரு சம்பவம்..!
வேங்கை வயல் கிராமத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சி மேல் நிலைத் தொடர் தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் ஏறிய சில மர்ம நபர்கள் மர்ம பொருளை வீசி சென்றதை அந்த பகுதி மக்கள் கவனித்தனர்.
உடனடியாக அந்த பகுதி வார்டு கவுன்சிலர் தண்ணீரில் இருந்தது என்ன என்று பார்த்தபோது, அது மனித கழிவு என்பது தெரியவந்தது.
இந்த நிலையில், திருச்சி மாநகராட்சி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு வீசியவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த பகுதியில் கஞ்சா போதையில் சிலர் சுற்றி திரிவதாகவும், அவர்கள் தான் மனித கழிவு கலந்து இருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran