தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கூண்டோடு பணிமாற்றம்
தமிழகத்தில் 58 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணிமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து, தமிழக அரசு சார்பில் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் 58 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், ஐ.ஜி.க்களில் 5 பேர் ஏ.டி.ஜி.பி.க்களாகவும், டி.ஐ.ஜி.க்கள் 15 பேர் ஐ.ஜி-க்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 8 எஸ்.பி.க்களுக்கு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதில், கோவை காவல் ஆணையர் விஷ்வநாதன், சென்னை போக்குவரத்துக் கழக ஏ.டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை எஸ்.பி.யாக உள்ள அன்பு நெல்லை சரக டி.ஐ.ஜி.ஆக நிமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் ஆபாஷ்குமார், காவலர் பயிற்சி அகாடமியின் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.