கிழக்கு பல்கலைக்கழகத்தில் தமிழ் – சிங்கள மாணவர் குழுக்களுக்கிடையிலான மோதலின் எதிரொலியாக, வந்தாறுமூலை வளாகத்திலுள்ள பொலிஸ் காவல் நிலையம் அகற்றப்பட வேண்டும் என்பது உட்பட மூன்று கோரிக்கைகளை முன் வைத்து தமிழ் மாணவர்கள் விரிவுரைகளைப் புறக்கணித்துள்ளார்கள்.