வியாழன், 13 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 13 மார்ச் 2025 (07:46 IST)

முதல்வர் பினராயி விஜயனுடன் சசி தரூர் எடுத்த செல்பி: காங்கிரஸ் ரியாக்சன்..!

கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் காங்கிரஸ் எம்பி சசிதரூர் செல்பி எடுத்த விவகாரம், காங்கிரஸ் கட்சி மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் நான்கு முறை தொடர்ச்சியாக எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர் சசிதரூர். மேலும், மன்மோகன் சிங் ஆட்சியில் அவர் மத்திய அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே அவர் காங்கிரஸ் தவிர மற்ற தலைவர்களை பாராட்டி வருகிறார். குறிப்பாக, அமெரிக்க அதிபர் ட்ரம்பை மோடி சந்தித்ததை பாராட்டிய அறிக்கை வெளியிட்டார். அதேபோல், கேரளாவில் பினராயி விஜயனின் ஆட்சி நன்றாக இருப்பதாகவும் அவர் பாராட்டினார்.

இவ்வாறான சசிதரூரின் செயல்கள், காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்கு அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம், காங்கிரஸ் கட்சி மேலிடத்திற்கு தவிர்க்க முடியாத சிக்கலை உருவாக்கி இருந்தாலும், அதே நேரத்தில் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனால், அடுத்த தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூருக்கு சீட் கிடைக்காது என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Edited by Siva