ஜெய்-யை காணவில்லை: கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு அறிவிப்பு
ஜெய் என்றதும் சினிமா நடிகர் ஜெய் என்று நினைக்க வேண்டாம். நாக்பூரில் அம்ரெட் கர்கன்லா என்ற காட்டில் உள்ள ஒரு புலியின் பெயர் தான் ஜெய். 7 வயதான இந்த புலி தான் அந்த காட்டின் ராஜா என கூறப்படுகிறது.
2013-ஆம் ஆண்டு இந்த காட்டுக்கு வந்த ஜெய் புலி 250 கிலோ எடை கொண்டது என கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் கடைசியாக தென்பட்ட இந்த புலியை தற்போது வரை காண முடியவில்லை.
இதனால் காணாமல் போயுள்ள இந்த புலியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசாக தரப்படும் என அறிவித்து வனத்துறை தீவிரமாக புலியை தேடும் பணியில் ஈடுபாட்டு வருகிறது.
புலியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதால் பல பேர் இந்த புலியை தேடும் பணியில் தீவிரமாக தேடி வருகின்றனர். 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தேடுதல் வேட்டை நடந்து வருகின்றது.