செருப்பு போட்டு சிவன் மீது ஏறுகிறார்...
செருப்பு போட்டு சிவன் மீது ஏறுகிறார்...
அஜய் தேவ்கான் Shivaay என்ற படத்தில் நடித்து வருகிறார். பனி சூழ்ந்த மலையில் நடக்கும் கதை.
ஹாலிவுட்டுக்கு இணையான ஆக்ஷன் அதிரடிகளுடன் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.
சமீபத்தில் இந்தப் படத்தின் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, எப்படி? என்று கேட்டிருந்தார். போஸ்டர் எப்படி?
பிடித்திருக்கிறதா? மிரட்டுகிறதா? என்று அவர் கேட்ட கேள்விக்கு, அவரையே மிரட்டுகிற மாதிரி டெல்லி போலீஸில் ஒரு வழக்கு பதிவாகியுள்ளது.
அஜய் தேவ்கான் சிவனின் உருவத்தின் மீது காலில் ஷு போட்டுக் கொண்டு ஏறுகிறார். இது இந்துக்களையும், இந்துக் கடவுள்களையும் மற்றுமுள்ள முப்பத்து முக்கோடி தேவர்களையும் கொச்சைப்படுத்தும், கேவலப்படுத்தும் செயல் என்று வக்கீல் ஒருவர் புகார் செய்ய, அட, இதுக்குப் போய் போஸ்டரை போட்டுத் தொலைத்தோம் என்று தலையில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறார் அஜய் தேவ்கான்.