செவ்வாய், 2 ஜூலை 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (17:16 IST)

படகை சரிசெய்ய கடலில் குதித்த இந்திய இளைஞர்! – அமெரிக்காவில் சோகம்!

drowning
அமெரிக்காவில் படகு சவாரி சென்ற இந்திய இளைஞர் படகை சரி செய்ய கடலில் குதித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் வெமுலவாடா பகுதியை சேர்ந்தவர் யஷ்வந்த் குமார். ஐதராபாத்தில் பி.டெக் படித்த இவர் எம்.டெக் படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவின் மேற்கு ப்ளோரிடா பகுதியில் வசித்து வந்த அவர் அங்குள்ள கிராப் தீவுக்கு நண்பர்களுடன் படகில் சென்றுள்ளார்.

அப்போது படகு பழுதானதால் அவரும் அவரது நண்பர்களும் கடலில் குதித்து சரி செய்ய முயன்றுள்ளனர். ஆனால் கடலில் அலை வேகமாக வீசியதால் அவர்கள் இழுத்து செல்லப்பட்டுள்ளனர். அவ்வழியாக வந்த ஷெரீப் அலுவலக படகு அவர்களில் 4 பேரை மீட்டுள்ளது.

கடலில் பெரிய அளவில் அலைகள் வீசியதால் யஷ்வந்த் கடலில் இழுத்து செல்லப்பட்டார். கடலோர காவல் படையினர் பல மணி நேரம் தேடிய பின் அவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.