1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (00:19 IST)

இலங்கை உயர் அதிகாரியின் திடீர் இந்திய விசிட்..

கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி தென்னிந்தியாவின் இலங்கை துணை உயர் ஆணைராக வெங்கடேஷ்வரன் என்பவர் ராஜபக்ஷேவால் நேரடியாக நியமிக்கப்பட்டார்.அவர் பொறுப்பேற்று கொண்ட நாள் முதலாக பல்வேறு நாடுகளுக்குச் சென்று அந்நாட்டில் உள்ள முக்கிய வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிட்டு வருகிறார்.

அதன்படி இந்தியாவிற்கு வந்தவர், முதலில் கேரள மாநிலத்தில் முதல்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்துள்ளார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வருகை தந்த வெங்டேஷ்வரன், தமிழக தலைமைச்செயலாளர் இறையன்புவை சந்தித்தார். அதன்பிறகு காரைக்கால் துறைமுகத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

ஏற்கனவே இலங்கையில் சீனா துறைமுகத்தை கட்டமைத்து வருகிறது. இலங்கையை தன்வசப்படுத்தி இந்தியாவிற்கு எதிராக பல்வேறு திட்டங்களை தீட்ட சீனா திட்டமிட்டு வருவது அனைவரும் அறிந்த விஷயம் தான்.

இதன் ஒரு பகுதியாகத்தான் இலங்கையில் தமிழர்களை கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் ராஜபக்சே தான்  வெங்கடேஷை இந்தியாவிற்கான இலங்கை தூதராக நியமனம் செய்து தமிழகத்தில் நடக்கும் பல்வேறு செயல்களை உளவு பார்ப்பதற்காக இலங்கை ஜனாதிபதி முடிவு செய்து திட்டங்களை தீட்டி வருவதாக பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி துறைமுகம் காரைக்கால் துறைமுகம் சீனாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது .இதனால் இந்த இரண்டு துறைமுகங்களின் கட்டமைப்புகளை பலவீனப்படுத்த பல்வேறு முயற்சிகளில் சீன அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சீனாவின் கைப்பாவையாக இருக்கும் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் காரைக்கால் துறைமுகத்தில் ஆய்வு நடத்துவது என்பது இந்தியாவின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட ஒரு சவால்.

தமிழகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் காரைக்காலில் உள்ள துறைமுகத்தில் என்ன கட்டமைப்பு இருக்கிறது என்பதை முழுமையாக இலங்கைக்கு உளவு சொல்வதற்காகவே  இலங்கை தூதர் வெங்கடேஷ் நியமனம் இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.தற்போது இந்தியாவிற்கான இலங்கை தூதராக நியமிக்கப்பட்டு இருக்கும் இந்த வெங்கடேஷ் 2009ஆம் ஆண்டு இலங்கை ராணுவம் அப்பாவி தமிழர்களையும் விடுதலை புலிகளையும் கொன்று குவித்த சவேந்திர சில்வா மற்றும் கமல் குணரன் ஆகியோரின் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்த தமிழின துரோகி தான் வெங்கடேஷ்.

அதேபோல 2009ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது விடுதலைப் புலிகளுக்கு எங்கிருந்து ஆதரவு வருகிறது என்பது குறித்து  அப்போது தனக்கு தெரிந்த தகவல்களைக் கூறித் தேவையான சன்மானங்களை  வெங்கடேஷ் பெற்றுக் கொண்டதாகவும் விமர்சனம் எழுந்தது.

இப்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதால் இங்கு நடக்கும் பல விஷயங்களை அலுவல் ரீதியாகவும் ரகசியமாகவும் இலங்கை அரசுக்கு தெரிவிக்க தன் அடிமைகளில் ஒருவரான வெங்கடேஷை தமிழகத்திற்கு அனுப்பி  வைத்திருப்பதாகவும் சந்தேகம் வலுத்துள்ளது.

இந்த நியமனம் தொடர்பான நம்மிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்ட சென்னை இலங்கை தூதரக அதிகாரிகள், இதுவரை இந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகள் Srilanka Foreign Service நியமனம் மூலமே தேர்வு செய்யப்பட்டார்கள். கடந்த காலங்களில் தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகள் தமிழர்களாக இருந்த போதிலும் ராஜபக்ஷே அரசுக்கு அரசியலமைப்பு சட்டத்தை மீறி ஒத்துழைப்பு வழங்கவில்லை.

இந்த தகுதியான தமிழர்கள் இருந்த போதிலும் Srilanka Foreign Service தகுதியும் இல்லாத நபரை இலங்கை அரசியலமைப்பு சட்டத்தை மீறி இந்தியாவிற்கான இலங்கை தூதராக வெங்கடேஷை  நியமிக்கபட்டிருப்பதற்கு பின்னால் பல ரகசியங்கள் உள்ளன.இந்த நியமனம் மூலம் அரசின் ரகசியங்களை ராணுவ உளவாளியான வெங்கடேஷ் மூலம் தெரிந்து கொள்ள இலங்கை அரசு விரும்புகிறது.

சமீபத்தில் திருச்சியில் உள்ள Kothagiri sugars and Chemicals Ltd நிறுவனத்திற்கு சென்று நேரடியாக பார்வையிட்டு இருக்கிறார் இந்தியாவிற்கான இலங்கை தூதர் வெங்கடேஷ்.
திருச்சியில் உள்ள நிறுவனத்திற்கும் இந்தியாவிற்கான இலங்கை தூதருக்கும் என்ன சம்பந்தம்?

திருச்சியில் உள்ள இந்த நிறுவனத்திற்கு சென்று பார்வையிட்டது தொடர்பாக இந்தியாவிற்கான இலங்கை தூதர் வெங்கடேஷ் அதிகாரப்பூர்வ இலங்கை தூதர் முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிடும்போது இலங்கை ஜனாதிபதி வழிகாட்டுதலின் பேரில் இந்த நிறுவனத்தை பார்வையிட வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

 
தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் ரகசியங்களை இலங்கை அரசுக்கு உறவு சொல்வதற்காகவே இந்தியாவிற்கான இலங்கை தூதராக ராஜபக்சேவின் கைக்கூலி வெங்கடேஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாகத்தான் தமிழகத்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு நேரடியாக சென்றதோடு இலங்கை ஜனாதிபதியின் வழிகாட்டுதல் மூலமாக தான் அங்கு சென்றதாக தைரியத்தோடு இலங்கை தூதர் வெங்கடேஷ் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அதேப்போல் சமீபத்தில் கோயமுத்தூரில் உள்ள நேரு வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளிக்கும் சென்று வந்திருக்கிறார் வெங்கடேஷ். இலங்கை துணை ஆணையருக்கும் கோவையில் உள்ள பள்ளிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது?

இப்படி தமிழகத்தில் பல இடங்களுக்கு சென்று அங்குள்ள தகவல்களை பெற்று இலங்கைக்கு உளவு சொல்கிறார் ராணுவ உளவாளி வெங்கடேஷ்வரன்.

தகுதியான தமிழர்கள் இருந்த போதிலும் Srilanka Foreign Service தகுதியும் இல்லாத நபரை இலங்கை அரசியலமைப்பு சட்டத்தை மீறி இந்தியாவிற்கான இலங்கை தூதராக வெங்கடேஷை  நியமிக்கபட்டிருப்பதற்கு பின்னால் பல ரகசியங்கள் உள்ளன.

இந்த நியமனம் மூலம் அரசின் ரகசியங்களை ராணுவ உளவாளியான வெங்கடேஷ் மூலம் தெரிந்து கொள்ள இலங்கை அரசு விரும்புகிறது.

மேலும் தமிழகத்தில் உள்ள பல அதிகாரிகளை சந்தித்து  இதன்மூலம் அரசு தகவல்களையும் உளவு பார்த்து இலங்கைக்கு தகவல் அனுப்புகிறார். அதேப் போல தூத்துக்குடி அனல்மின் நிலையத்திலும் வெங்கடேஷ் ஆய்வை நடத்தி முடித்திருக்கிற வெஙகடேஷ்,  முட்டியரா அனல் மின் நிலையத்திற்கும் சென்று ஆய்வு செய்துள்ளார். ஏற்கனவே தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் சீனாவில் அச்சுறுத்தல் உள்ளதால் இலங்கையின் துணை உயர் ஆணையர் ஏன் சென்று ஆய்வு நடத்தினார் என்பதே அனைவரின் கேள்வியாகும். அதேபோல் கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கும் நேரில் சென்ரு அவர் ஆய்வு நடத்தியுள்ளது குறிப்பிடத்தகக்து.