தொடர்புடைய செய்திகள்
- ராமஜெயம் கொலை வழக்கு; உண்மை கண்டறியும் சோதனைக்கு 8 பேர் ஒப்புதல்
- ஒரு சொட்டு கண்ணீர் விட்டதுண்டா? ராஜீவ் காந்தியுடன் இறந்த இன்ஸ்பெக்டரின் மனைவி பேட்டி!
- பிரபல நடிகரின் மனைவியை கட்டிப்போட்டு 200 பவுன் நகை கொள்ளை: சென்னையில் பரபரப்பு
- ’கடை எரிஞ்சதால சாகல..? நான்தான் தீ வெச்சேன்’ – பக்கத்துக்கடைக்காரர் செய்த பகீர் சம்பவம்!
- உயிர்பிச்சை கேட்டு கெஞ்சிய தொழிலாளி; இரக்கமின்றி கொலை! – கன்னியாகுமரியில் அதிர்ச்சி!
குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனை - தாலிபான்கள் உத்தரவு
கொலை கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இஸ்லாமிய சட்டத்தின்படி தண்டை கொடுக்க வேண்டும் என தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டு அதிபர் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க ராணுவம் தங்கள் படைகளை வாபஸ் பெற்றது.
இதையடுத்து, பழமைவாதிகளான தாலிபான்கள் கையில் ஆட்சி அதிகாரம் சென்றது. ஏற்கனவே, மக்களின் அடிப்படை உரிமைகளில் தலையிட்டு, குழந்தைகள், பெண்களுக்கு எதிராக பல சட்டங்களை அமல்படுத்தியுள்ள சர்ச்சையாகியுள்ள நிலையில் தற்போது குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு இஸ்லாமிய சட்டப்படி தண்டனையளிக்க வேண்டுமென கூறியுள்ளனர்.
இந்த நிலையில், தாலிபான்களின் தலைவர் மவ்லவி ஹெபத்துல்லா நீதிபதிகளுக்கு புதிய உத்தரவிட்டுள்ளார். அதில், கொலை, கொள்ளை உள்ளிட்ட முற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு இஸ்லாமிய சட்டப்படி கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Edited by Sinoj
அடுத்த கட்டுரையில்
