1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2017 (20:19 IST)

பாகிஸ்தான் பிரதமாகிறார் நவாஸ் ஷெரீப் சகோதரர்!!

பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக நவாஸ் ஷெரீப் இருந்தார். பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.


 
 
பனாமாவில் உள்ள மோசக் பொன்சிகா என்ற பிரபலமான சட்ட நிறுவனம் 1.15 கோடி பக்கங்கள் அடங்கிய ரகசிய ஆவணங்களை பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியிட்டது. அதில் வெளிநாடுகளில், போலியான நிறுவனங்களில் முதலீடு என்ற பெயரில், உலக தலைவர்கள் பலர் பணம் பதுக்கி வைத்துள்ளது அம்பலமாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இந்த குழுவின் விசாரணையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகள், மருமகன், சகோதரர் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டனர். 
 
நவாஸ் ஷெரீப் மீதான குற்றங்கள் நிறுபனமானதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து, நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷபாஸ் ஷெரீப் அந்நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது பஞ்சாப் மாகாண முதல்வராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.