1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By papiksha joseph
Last Updated : திங்கள், 24 ஜனவரி 2022 (19:27 IST)

உக்ரைனில் உள்ள தனது குடிமக்களை வெளியேற்றும் ஜப்பான்!

அமெரிக்காவைத் தொடர்ந்து ஜப்பான் அரசாங்கமும், உக்ரைன் நாட்டில் உள்ள தனது அனைத்துக் குடிமக்களையும் வெளியேற்ற ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் படையெடுக்கலாம் என்கிற அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 
பிரிட்டனும் தனது தூதரக ஊழியர்களை படிப்படியாக வெளியேற்ற தொடங்கி உள்ளது கவனத்திற்குரியது!
 
உக்ரைனை ஆக்கிரமிக்க தயாராகும் வகையில், அந்நாட்டு எல்லைக்கு அருகே ரஷ்யா படைகளைக் குவித்து வருவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.